இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள்

  கீழடி அகழாய்வில் புலப்படுகின்ற செய்திகள் 1. தமிழக வரலாற்றில் வரையறுக்கப்பட்ட கருதுகோளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. 2. சங்க காலத்தின் கால வரையறையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. 3. கீழடியில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றது. 4. கி.மு. 6ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை உணர்த்துகின்றது. 5. சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை காட்டுகின்றது. 6. வேளாண்மைத் துணைத் தொழிற்கூடங்கள், பானைத் தொழிற்கூடங்கள், ஆடைகள் தயாரிக்கும் நெசவுக்கூடங்கள் ஆகியவை இருந்துள்ளமையை அடையாளம் காட்டுகின்றது. 7. செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு 97 சதவீதம் சுண்ணாம்புச் சாந்தினைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகின்றது. 8. தொழிற்கூடங்களுக்கு அருகில் குடிநீர்ப் பயன்பாட்டிற்கு உறை கிணறுகள் அமைத்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது. 9. எளிய மக்கள் தங்களுக்குரிய பானைகளில் தங்களின் பெயர்களைத் தாங்களே தமிழி ...

அணிகலன்கள்

                              அணிகலன்கள் பெண்களின் ஆடை பண்டைத் தமிழகத்துப் பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப்படாத தம் உடலை அணிகலன் கொண்டு மறைத்தனர். மகளிர் பல்வேறு அணிகலன்களினால் தம்மை ஒப்பனை செய்து கொண்டனர். பொன் யவனர் ஏற்றி வந்து இறக்கிய பொன், மன்னர்கள் பகைவரிடமிருந்து கவர்ந்து கொணர்ந்த பொன், நாட்டில் மண்ணைத் தோண்டியும் அரித்தும் எடுத்த பொன் என தமிழகத்தில் எங்கும் பொன் மலிந்து கிடந்துள்ளன. முத்தும்,பவளமும் இதரமணி வகைகளும் இழைத்துப் பலவகையான அணிகலன்கள் செய்யப்பட்டன.  இவ்வணிகளைக் கைதேர்ந்த கம்மியர்கள் செய்தனர். சிலப்பதிகாரத்தில் அணிகலன்கள்  கால்விரல் மோதிரம், பரியகம் நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், 32 வட்டத்தாலான முத்து மேகலை,மாணிக்கமும், முத்தும் இழைத்த தோள் வளையல்கள், மாணிக்கமும் வைரமும் பதிக்கப்பட்ட சூடகம், செம்பொன் வளை, நவமணி வளை, சங்கு வளை, பவழ வளை, வாளைமீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட மாணிக்க மோதிரம், ஆகியன பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பிற...

பண்டைய தமிழரின் உணவுப் பழக்கம்

 பண்டைய தமிழரின் உணவுப் பழக்கம் இனக்குழு பண்டைத் தமிழர் இனக்குழு வாழ்க்கை முறையைப் பின்பற்றினர். இக் காலத்தில் உணவுத் தேடலே முதன்மை என்பதால் கிழங்கு, காய், பழம் முதலியன உணவாகப் பயன்பட்டன. வேட்டையாடுதல் அது போதாமை ஏற்பட்டபோதுவேட்டையாடி விலங்குகளைப் பச்சையாகவும், விலங்குகளையும் உணவாகப் பயன்படுத்தினர்.  அரிசிச் சோறு அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர். அவர்கள் புழுங்கல் அரிசியையே உண்பது வழக்கம். அரிசியை உரலிலிட்டு அதை வெளுக்கத் தீட்டி உலையிலிட்டனர். அவர்கள் வரகையும் சாமையையும் சமைத்து உண்டனர். பழஞ் சோற்றையும் மக்கள் உண்பதுண்டு. கஞ்சி அரிசி, கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்பு ஆகியவற்றை பாலில் கூட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடிப்பார்கள். காய்கறி சோற்றோடு காய்கறி வகைகளையும் சமைத்து உண்பர். காய்கறிக்குக் கடுகு தாளிப்பார்கள். மிளகும் புளியும் உப்பும் உணவில் சேரும். புளி வகை மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப் புளிக்க வைத்து, அதைப் பிழிந்து பயன்படுத்துவதுர் கலாபழப் புளி, தொடரி புளி, நாவற்பழப் புளி ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன. புளிக்க வைத்த மாவை கரைத...

கற்பு வாழ்க்கை

                          கற்பு வாழ்க்கை கற்பு = திருமண வாழ்க்கை அகத்திணையில் திருமண வாழ்க்கை என்பது கற்பு எனப்படுகிறது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களின் திருமணத்திற்கு உடன்படுவர். திருமண ஏற்பாடுகள் திருமணம் ஒருநல்ல நாளில் நடைபெறும். தீயகோள்கள் விலகி நிலாவும் ரோகிணியுடன் சேர்ந்த நல்ல நாளாக இருக்க வேண்டும். விடியற் காலையில்தான் திருமணம் நடைபெறும். திருமணபந்தலின் கீழ் புதுமணல் பரப்பப்படும். மாலைகள் தொங்க விடப்படும். அழகிய விளக்குகள் ஏற்றப்படும். வதுவை நாள் மணம் வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களி எடுத்து தம் தலையில் சுமந்து வந்து சிறு மண்டை (மண் பானை)என்ற அகன்ற வாயுள்ள களத்தில் ஊற்றுவார்கள். குழந்தைகளைப் பெற்ற மங்கல மகளிர் நான்கு பேர் கூடிய சிறு மண்டையில் உள்ள தண்ணீரில் பூக்களையும் நெல்லையும் இட்டு அந்தத் தண்ணீரை முகந்து மணமகளை நீராட்டுவர் . இச்சடங்கு வதுவை நான் மனம் எனப்படும். வாழ்த்து அப்போது அப்பெண்டிர், "இவள் கற்பு நெறியில் நின்று, கணவனை விரும்பிப் பேணும் துணைவியாவாள்" என்று வாழ்த்துவ...

களவு வாழ்க்கை

            களவு வாழ்க்கை களவு அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத் தலைவன் என்றும் காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபு. மணப்பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் தாமாகவே கூடி அல்லது பிறரால் கூட்டப்பட்டு கணவன் மனைவி ஆவார்கள். தாமாகக் கூடும் கூட்டம் களவு எனப்படும். அவர்களுடைய திருமணம் எந்த இடையூறும் இன்றி நடைபெற காதலனின் தோழனும் காதலியின் தோழியும் துணைநிற்பர். மடலேறுதல் தான் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காத ஆண்மகன் சில சமயம் மடலேறுவதுண்டு. பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து, அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவம் தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்திக் கொள்வான். இந்த ஊர்தியைத் தெருத் தெருவாக இழுத்துச் செல்லும்போது, உடலில் குருதி வெளிப்படும். பெண்ணின் பெற்றோர் அவனுக்கே அப்பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பார்கள். பெண்கள் மடல் ஏறும் வழக்கம் இல்லை. திருமங்கை ஆழ்வார் பிற்காலத்தில் திருமங்கை ஆழ்வார், தலைவி ஒருத்தி தலைவன் பிரிவால் 'காதல் கைமிக்கு மடலூரத் துணிந்தாள்' என்று புதுமையாகப் பாடுகின்றார். திருமணம் உடன் போக்கு தலைமக்கள் இருவரும் தங்கள் காதலுக்கு இ...

திணை வாழ்வியல்

                      திணை வாழ்வியல் வரலாற்றுக் காலம் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் என்று சங்ககாலத்தைக் குறிப்பிடலாம். இக்காலத்தில் தமிழரின் நாகரிகம் முழுவளர்ச்சி பெற்றிருந்தது. பாண்டியர், சோழர்,சேரர் என் முப்பெரும் மன்னர்கள் அரசாண்டனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை, சோழரின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம் (புகார், பூம்புகார் என்பன வேறுபெயர்). சேரரின் தலைநகரம் வஞ்சி என்பது. தமிழ்நாடு - தமிழர் தமிழ்மொழி பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் இருந்ததால் தமிழ்நாடு என்றானது. அம்மொழி பேசியோர் தமிழர் என்றும் பெயர் பெற்றனர். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர் இனம் மூன்றும் தமிழரின் நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது. சங்கஇலக்கியங்கள் சங்கஇலக்கியங்கள் துணையோடுதான் தமிழரின் பண்டைய வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்துகொள்ள முடியும். மூவேந்தர் மட்டுமல்லாமல் குறுநில மன்னர்கள், சிறுமன்னர்கள், பெருங்குடி மன்னர்கள் என ஆட்சியாளர்கள் - மக்கள்- புலவர்கள் முதலியன குறிப்பிடத்தக்க பண்பாட்டு அடையாளங்களை சங்கஇலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும்....

சங்ககால ஆட்சிமுறை,சங்ககால ஆட்சிமுறை,மருமக்கள் தாயமுறை,ஐம்பெரும் குழு,எண்பேராயம்

                           சங்ககால ஆட்சிமுறை   பெண்வழிச் சமுகம் மிகத்தொடக்க காலமான கற்காலங்களில் தலைமை வகித்த ஆணோ பெண்ணோ அவர்கள் சார்ந்த குழுவின் தலைவர் ஆவர். அதில் பெண்ணே தலைமை தாங்கியதால் ஆண் வழிச் சமூகம் தோன்றும் முன்னர் பெண்வழிச் சமுகமாகவே இருந்தது. பெண்வழி சமூகம் இருந்த காலத்தில் உணவு சேகரிப்புப் போதாமை ஏற்பட்டது. அதன் பின்னர்   ஆண்கள் செய்த உற்பத்திப் பணியை ஆண்கள்   ஈடுபட்டனர். பெண் தெய்வங்கள் இத்தகைய சூழலில் பெண் தலைமை தாங்கியவர்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகி விட்டனர். அணங்கு முதலிய காவலாளர்கள் காவல் தெய்வங்களாகி விட்டன. இனக் குழுக்கள் : தமிழ்க் கடவுள் ஆண் தலைமையைச் சில இனக் குழுக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்களின் முன்னோர் தற்காலத்தில் தமிழ்க் கடவுள்களாக உருமாற்றம் பெற்றனர். இவர்கள்தான் நிலக் கடவுள்களாகிய முருகன், திருமால், இந்திரன், கொற்றவை, வருணன் முதலானோர். பல இனக் குழுக்கள் ஏற்றுக் கொண்ட கடவுளரில் ஒருவர் சிவன் எனலாம். இனக்குழு சமுதாயம் இனக் குழுத் தலைவர்களில...

அயல்நாட்டுத் தொடர்புகள்,பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர் ,ஒரிசா பாலு ,முசிறித் துறைமுகம்

           பாடம் – பத்து அயல்நாட்டுத் தொடர்புகள்   பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர் நாடுகள் என்ற வரையறை தோன்றும் முன்னரே  பிறகும் தமிழர்கள் அரசமைக்கவும் வணிகம் மேற்கொள்ளவும் மதம் சார்ந்தும் பிற நாடுகளுக்கு சென்றனர் . கடல் கடந்து வாணிகம் செய்தோர் பதினெண் விசயத்தார் திசை ஆயிரவர் எனப் அழைக்கப்பட்டனர். பூர்வகுடிகள்   கொரியாவில் தமிழ் நிலப்பெண் ஒருத்தி அரசியாக ஆண்டிருக்கிறாள். ஜப்பான், தாய்லாந்து, கனடா, உருகுவே, கலிஃபோர்னியா, மலேசியா போன்ற நாடுகளின் பூர்வகுடிகளாய்த் தமிழர் இருந்தனர். ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும் தமிழ்ப் பூர்வகுடிகள் இருந்துள்ளனர். சுமேரியம், பார்சி போன்ற மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்துள்ளன. சுமார் 8,500 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தமிழும் தமிழரும் பரவியிருந்துள்ளனர். சுமார் 191 நாடுகள் தமிழ் பேசப்படும் இடங்களாக உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர் தமிழ்மொழியானது, உலகின் பிற தொன்மை மொழிகளில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து கொரியா சென்ற 3 பெண்கள் நெல் விளைவித்தல்,கடலில் ம...

கல்வியும் கலைகளும்,ஓவியக்கலை, புலிமான்கோம்பை,'கணக்காயர்' ஏரம்பம்

                                                                       பாடம் ஏழு கல்வியும் கலைகளும்   ஓவியக்கலை வரலாற்றுக்கு முந்தைய பண்டைத் தமிழர், கல்வி கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை. அவர்களது பட்டறிவின் வெளிப்பாடாக, குகைகளில் வரைந்துள்ள ஓவியங்களே, கற்பிக்கும் செய்தியாக அமைந்திருக்கக் கூடும். அதன் வழியாக ஓவியக்கலையும் வளர்ந்திருக்கிறது கீழடி பாமர மக்களும் கல்வியறிவு அல்லது எழுத்தறிவு பெற்றிருந்தனர்.   சான்றாக கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்துகள்  பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் புலிமான்கோம்பையில் கல்வெட்டாகவும் எழுத்துக்கள் இருப்பதைச் சான்றாகக் கொள்ளலாம். திருக்குறளில் கல்வி திருக்குறளில் கல்வி குறித்துப் பேசும் அதிகாரங்கள் நான்கு உள்ளன. குற்றமறக் கற்க வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும்; கல்வி உலகம் மு...