இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காளமேகப் புலவர் - கார்'என்று பேர்படைத்தாய் - தனிப்பாடல்

         காளமேகப் புலவர் - கார் ' என்று      பேர்படைத்தாய்     காளமேகப் புலவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் சிலேடைப் பாடல்களைப் பாடுவதில்  வல்லவர். இரு பொருள்படவும் நகைச்சுவை தோன்றவும் கவிபாடுவதில் வல்லவர். வைணவ சமயத்தில் பிறந்த இவர் , திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த  மோகனாங்கி என்பவளிடம் காதல் கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ  சமயத்துக்கு மாறினார். மேகங்கள் மழை பொழிவது  போன்று கவிமழை பொழிவதால் இவர்  காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். சிறந்த ஆசுகவி பாடும் வல்லமை மிக்கவர். இரட்டுற மொழிதல் , சித்திர மடல் போன்ற பாடல்களை இயற்றியுள்ளார்.      கார் ' என்று      பேர்படைத்தாய்       ககனத்து      உறும்போது ; ' நீர் ' என்று      பேர்படைத்தாய்      கொடுந்தரையில்    வந்ததற்பின் ; வார்ஒன்று       மென்முலையார் ...

நீர் மேலாண்மை- சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

                                                                     நீர் மேலாண்மை ஐம்பெரும் பூதங்களில் நீரும் ஒன்று . ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கமே உலகம் என்பர்.அத்தகைய நீரினைச் சங்கதமிழர் எவ்வாறு தங்கள் வாழ்வில் கையாண்டனர் , முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது சிந்திக்கத் தகுந்தது.   நீரும் திருக்குறளும் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்கள் இயக்கத்திற்கும் நீரே முதன்மை ஆதாரமாகும். இதனையே ,   நீர்இன் றமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன் றமையா தொழுக்கு (குறள். 20)   என்று கூறுகிறார். நீரின் இன்றியமையாமையை வான்சிறப்பு என்ற அதிகாரம் வழியாக உலகிற்கு   எடுத்துரைக்கின்றார்.     நீரும் சொர்க்கமும் சிறுபஞ்ச மூலம் யாருக்க...

ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும் - முல்லை - குறிஞ்சி - சிறுபொழுது -பெரும்பொழுது

படம்
                 ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும் சங்கத் தமிழர் நிலப் பகுப்பை ஐந்தாகப் பிரித்துத்  தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதிலிருந்து அம்மக்களின் சூழலியல் அறிவை நம்மால் உணர முடியும். தொல்காப்பியர்: தொல்காப்பியர் நிலங்களையும் அவற்றிற்குரிய கடவுளர்களையும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.   அதில் நான்கு திணைகளை மட்டும் கூறிவிட்டு பாலைத்திணையை அடுத்ததாகக்   கூறியுள்ளார்.   பாலைத்திணைக்கான நிலம் எதுவென்று தொல்காப்பியர் கூறவில்லை. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே (தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்) அன்பொடு புணர்ந்த ஐந்திணை ஐ ந்திணைகள் அகத்திணை ஏழிலும் மிகுந்த சிறப்பை உடையது. எனவே   இது ‘ அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ (தொல்.கள. 1) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலை - நடுவண் ஐந்திணைகளில் பாலை எனும் திணை நடுவண்   எனும் சொல்லாலேயே...

அறிவியலும் மனித வாழ்வும்

          அறிவியலும்   மனித வாழ்வும் அறிவியல் என்பது "அறிந்து கொள்ளுதல் " எனப் பொருள்படும்.   scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிந்து கொள்ளுதல் என்று பொருள்படும் . தொல்காப்பியத்தில் அறிவியல் : தொல்காப்பியர் உயிர்களை ஆறாக வகைப்படுத்துகிறார் . ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே" -தொல்காப்பியர். இதில் தொல்காப்பியர் மனம் என்று கூறியதே இன்று உளவியல் என்னும் தனி அறிவியல்   துறையாக வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் தோற்றம் வானத்திலிருந்து காற்றும் காற்றில் இருந்து தீயும் தீயில் இருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலையை பரிபாடலின் பாடல் கூறியுள்ளது . ஐம்பூதங்களின் கூட்டாகவே   இவ்வுலகு அமைந்துள்ளன. இதனையே கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் விளக்குகின்றன “மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவர...