இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த

              அகநானூறு - 86 - நல்லாவூர் கிழார் - உழுந்து தலைப்பெய்த               பாடியவர் - நல்லாவூர் கிழார்   திணை – மருதம்   கூற்று – தலைவன்   துறை -வாயில் மறத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.   தலைமகைள்கூடி   இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று   இன்புற்றிருந்ததூஉமாம்.   உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப , நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து , மாலை தொடரி , கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை ;       கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென , உச்சிக் குடத்தர் , புத்தகல் மண்டையர் , பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர ,           புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூட...

குறுந்தொகை 88. குறிஞ்சி ஒலி வெள் அருவி

                            குறுந்தொகை     88. குறிஞ்சி ஒலி வெள் அருவி திணை : மருதம் பாடியவர் : மதுரைக் கதக்கண்ணன் கூற்று :இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் , சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல் , நடு நாள் வருதலும் வரூஉம் ; வடு நாணலமே-தோழி!-நாமே. பொருள்: ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய , உயர்ந்த மலைகளுள்ள  நாட்டையுடைய தலைவன்சிறிய கண்ணையுடைய பெரிய களிறு ,  வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது , தனது பழைய வலிமையை  இழந்து நிற்கும் . மக்கள் செல்லுவதற்கு அரிய மலைச் சாரலின் வழியே ,  தலைவன் இரவில் வருகின்றான் .   அங்ஙனம் அவன் வருவதனால் நமக்கு  உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.  

நற்றிணை-நல்லந்துவனார்-யாம் செய் தொல் வினைக்கு

                    நற்றிணை கூற்று:தோழி துறை   :சிறைப்புறமாகத்தோழி , தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. – பாடியவர் :நல்லந்துவனார் திணை :குறிஞ்சி   யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை ? வருந்தல் ; வாழி!- தோழி!- யாம் சென்று உரைத்தனம் வருகம் ; எழுமதி ; புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றா அங்கு உருகி உகுதல் அஞ்சுவல் ; உதுக்காண்- தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி , நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது , கண்ணீர் அருவியாக அழுமே , தோழி! அவர் பழம் முதிர் குன்றே.   பொருள் : தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ  எதன்பொருட்டு வருந்துகின்றாய் ? இவ்வாறு   வருந்தாதே !  நீடுவாழ்வாயாக!.   இத்துன்பத்தை அவர்பால் நாம் சென்று கூறிவிட்டு  வருவோம் என்னுடன் எழுவாயாக! பொருந்திய அலைகளையுடைய கடல்  நீரால் விளைந்த உப்பு மழையின்கண் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகி வருந்துவதைக் கண்டு   நான் அஞ்சுகிறேன்.   தம்  தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை ...

நற்றிணை -உள் ஊர் மா அத்த- நக்கண்ணையார்

          நற்றிணை -உள் ஊர் மா அத்த - நக்கண்ணையார்   கூற்று:   தலைவி திணை : நெய்தல் துறை :வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு ,  தோழிக்கு உரைத்தது. பாடியவர் : நக்கண்ணையார்     உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் , வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு , அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5 பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் , பெருந் தண் கானலும் , நினைந்த அப் பகலே.     பொருள் : தோழீ! ; ஊரில்   உள்ள மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற  எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித்  தூங்குகிறது. அப்பொழுது வெல்லும் போரையுடைய சோழர் குடியிற்  பிறந்த  ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண்  உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு  காண்கிறது . அது ப...

நாலடியார் - ஈகை

                நாலடியார் - ஈகை   1.        இல்லா இடத்தும் இயைந்த அளவினால் உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு.        பொருள் : ஒருவரிடம் பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள்  உள்ளதுபோல் மகிழ்ந்து மற்றவர்க்கு இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் அடைக்காமல் எப்போதும் திறந்தே   இருக்கும்.     2.        முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள ; - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து . பொருள் : எதிரிலேயே இறக்கும் நாளும் , வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும்  உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும்  நம்மை    வருதுகின்றன . ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும்  அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலைய வேண்டாம் . பொர...

கண்ணோட்டம்-திருக்குறள்

                         கண்ணோட்டம் 1.      கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு . பொருள் : இந்த உலகம் , அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. 2.      கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. பொருள் : அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு , மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். 3.      பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். பொருள் : இரக்க உணர்வு , அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும் , பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும். 4.      உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். பொருள் : அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர , வேறு எந்தப்பயனும் இல்லாதவ...