பாரதியார் - பாரத சமுதாயம் பெயர் : சுப்பிரமணிய பாரதி பெற்றோர் : சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் பிறப்பு : 11.12.1882 இறப்பு : 11.09.1921 மனைவி : செல்லம்மாள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் போற்றப்படும் இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இதழியலாளர், சமூக சீர்த்திருத்தவாதி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். எட்டையபுரம் அரசசபையினரால் பாரதி என்ற பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். எட்டையபுர அரசவைக் கவிஞராக சிலகாலம் பணியாற்றினார். பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு சுதேசிய மித்திரன் என்ற பஇதழில் துணையாசிரியராக பணியாற்றினார். கல்கத்தாவில் தாதாபாய் நவ்ரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்தில் கலந்து கொண்ட போது விவேகானந்தரின் சீடர் நிவேதிக்கா தேவியை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்று அவரைத் தன் ஞானகுருவாக கொண்டார். 1907 ஆம் ஆண்டில் இந...
கருத்துகள்
கருத்துரையிடுக