இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருப்பாவை-ஆண்டாள் -மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்-யசோதை இளஞ்சிங்கம்-பொருள் - விளக்கம்

           திருப்பாவை-ஆண்டாள்     மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுமீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலோன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே , நமக்கு பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்   பொருள் மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்வ   வளம்  நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய  அணிகலன்களை அணிந்த பெண்களே   எழுந்திருங்கள். இன்று நாம்  அதிகாலையில் நீராடச் செல்வோம் . கூர்மையான வேலுடன் நம்மைப்  பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபனின் மகனும் ,  அழகிய  கண்களையுடைய யசோதாபிராட்டியின்   சிங்கம் போன்ற மகனும் ஆவான். அவன் கருமை   நிறத்தவன் .  தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை  உடையவன்.  சூரிய , சந்திரர்களைப் போல பிரகாசிக்கும்  முகத்தை  உடைய...

மாணிக்கவாசகர்- திருவாசகம்-நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!-பொருள்-விளக்கம்

              மாணிக்கவாசகர் திருவாசகம் (திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம் )   நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க   பொருள்   திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க.   திருவைந்தெழுத்தின் வடிவாக  விளங்கும் இறைவனது திருவடி வாழ்க.     இமைக்கும் நொடி  நேரமும்   கூட  என் மனத்தில் இருந்து   நீங்காத அவனின்   திருவடி  வாழ்க.   திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை ஆட் கொண்ட  குருமூர்த்தியின்   திருவடி வாழ்க.வேதங்களின்     வடிவாகி நின்று  இனிமையைத் தரும்   இறைவனது திருவடி வாழ்க.   ஒன்றாகவும்  பலவாகவும்   உள்ள இறைவனது திருவடி வாழ்க என்று வணங்குகிறார்.  

திருநாவுக்கரசர் - தேவாரம் - நாமார்க்குங் குடியல்லோம் -விளக்கம் -பொருள்

             திருநாவுக்கரசர் தேவாரம் நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்               நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்               இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான               சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்               கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே .   பொருள் யாருக்கும் அடிமையாகாத தன்மையை உடையவனும்   , நல்ல சங்காலான   வெண்குழையை ஒரு காதில் உடையவனும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய்,அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் சேவடிகளையே அடைக்கலமாக அடைந்ததேன் . எனவே நான் வேறு யார்க்கும் அடிமைத் தன்மையுடன் இருக்க ம...

இனியவை நாற்பது -பூதஞ் சேந்தனார்-இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே-பொருள்

           இனியவை நாற்பது -பூதஞ் சேந்தனார்   இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே   கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே   தடமென் பணைத்தோள் தளிரிய லாரை   லிடமென் றுணர்தல் இனிது.   பொருள்   இளவயதிலேயே முதுமையில் வரக்கூடிய   மனப்பக்குவம் கொண்டிருப்பது   இனிதானது .    உறவினர்கள் அன்புமொழிகள் கூறுபவராக இருப்பது   இனிதானது .   மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட தளிர்   போன்ற இளம் பெண்கள் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிவடைவது ம்   இனிதானதாம்.  

பழமொழி நானூறு - முன்றுறை அரையனார் - தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்- விளக்கம் - பொருள்

             பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்   தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார் செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது நின்னடை யானே நடவத்தா நின்னடை நின்னின் றறிகிற்பார் இல்.   பொருள் :   கீழான குணமுடையவர் தம் நடத்தையைத் தாம் எண்ணிப் பார்ப்பதில்லை.   தாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.   செம்மையான நன்னடத்தையைக் கடைப்பிடிப்பதில்லை.   இத்தகைய சிறியார் போல இல்லாமல் நம்முடைய   பெருமைக்கு ஏற்ற   நடத்தையைப் பின்பற்ற வேண்டும் .   நாம்   நடத்தையை நம்மைத்   தவிர   வேறு யார் அறிந்துகொள்ள   முடியும்.   ஆதலால் உன் பெருமைக்கு ஏற்ற   நடத்தையை நீதான் பின்பற்ற வேண்டும்.  

நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் - நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்-விளக்கம்-பொருள்

                   நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்   நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் ; குளத்துக்கு அணியென்ப தாமரை ;   பெண்மை நலத்துக்கு அணியென்ப ,   நாணம் ;   தனக்கணி தான்செல் உலகத் ( து )   அறம்.   பொருள் :   நிலத்திற்கு அழகு சேர்ப்பது நெல்லும் கரும்பும் விளையும் வயல்கள்.   குளத்திற்கு அழகு சேர்ப்பது தாமரை மலர்கள். பெண்மைக்கு அழகு   சேர்ப்பது நாணம். அதுபோலத் தனக்கு அழகு சேர்ப்பது நாம் செய்யும்   அறச்செயல்கள்.      

நாலடியார்-குஞ்சி அழகும்-பொருள்

                       நாலடியார் குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு பொருள் : மயிர் முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும் மஞ்சள்   பூச்சின் அழகும் மக்களுக்கான   அழகுகள் அல்ல. மனம் அறிந்து உண்மையாக   நல்லவர்களாக உணரும் ஒழுக்கத்தைக் கொடுப்பதால்   மக்களுக்கு கல்வியே உயர்ந்த அழகாகும்.      

திருக்குறள் – அறன் வலியுறுத்தல்- பொருள்

                        அறன்வலியுறுத்தல் - பொருள் - விளக்கம் 1 . சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு .    அறம் சிறப்பையும் அளிக்கும் : செல்வத்தையும் அளிக்கும் : ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது ?   2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு .       ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை : அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை .   3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் .     செய்யக்கூடிய வகையால் , எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும் .   4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற .    ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும் . அறம் அவ்வளவே : மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை . ...