இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

  வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க பதப்பொருள் :  மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக;   பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக;   தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக;   கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளும்  இறைவன் திருவடிகள் மேம்படுக;  கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரச் செய்யும் சிறப்புடையவனது  திருவடி மேம்படுக.

பட்டினத்தார் பாடல் காடே திரிந்தென்ன

                    பட்டினத்தார் பாடல்கள் காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி ஓடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஓங்குவிண்ணோர் நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால் வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் முற்றும் துறந்து விட்டு காட்டில் வாழ்வதால் பயன் இல்லை.  காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை.  ஆனால் மருந்தீசர் மேல் உள்ளம் வைத்து இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன் வாழ்ந்தாலும், உள்ளத்தில் அன்போடு இருப்பவனே இறைவனின் திருவடி அடைவான். பாடல்2 தாயும் பகைகொண்ட பெண்டிர் பெரும்பகை தன்னுடைய சேயும் பகையுற வோரும் பகைஇச் செகமும்பகை ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கிலிங் காதலினால் தோயுநெஞ் சேமரு தீசர்பொன் பாதஞ் சுதந்தரமே (2) வாழ்வதற்குரிய செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவாள்.  நம் பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவாள். நம் மூலமாக இ...