இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேரர்

                            சேரர் சேரர் பண்டைத் தமிழகத்தில் புகழுடன் விளங்கியவர்கள் தமிழகத்தின் மேற்குக் கரை சேர நாடு ஆகும் அந்த நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் சேரர்   ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும் , வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. வேணாடு , குட்டநாடு , தென்பாண்டி நாடு ஆகிய இன்றைய கேரளாவும் சேரர்களால்   ஆளப்பட்டது . தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை அதாவது அமராவதி ஆற்றின் கரையிலுள்ளது .   முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவும் , சங்க காலச் சேரர்களைப் பற்றி ய   செய்திகள் சிறிதளவும் காணக்கிடைக்கின்றன . சேர அரசர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்த...

இசுலாமியரின் / முகாலயர்கள்

                   இசுலாமியரின் / முகாலயர்கள் / இசுலாமிய மதத்தைப் பரப்புதல்   வட இந்தியாவில் ஆட்சி செய்துவந்த இசுலாமிய அரசர்கள் தென் இந்தியாவில் நுழைந்து தங்களது இசுலாமிய மதத்தைப் பரப்ப நினைத்தனர். அதன்பொருட்டு அலாவுதீன் கில்ஜி   என்ற கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த   மன்னன் தமிழ் நாட்டைக் கைப்பற்றி அங்கு இசுலாமிய சமயத்தைப்   பரப்ப எண்ணினான். அதற்கான படையெடுப்பு   மாலிக்காபூர்   தலைமையில் நடைபெற்றது. மதப்பற்று : வீரபாண்டியன் படையில் இருந்த சுமார் 20000 இசுலாமியப் போர் வீரர்கள் மாலிக்காபூர் பக்கம் சென்று சேர்ந்து விட்டனர். இதற்கு மதமே காரணமாகும் என்பர். பாண்டிய - வாரிசு உரிமை மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குச் சடையவர்மன் சுந்தரபாண்டியன் , சடையவர்மன் வீரபாண்டியன் என்னும் இரு புதல்வர்கள். அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன் . வீரபாண்டியன் காமக்கிழத்தியின் மகன். குலசேகரபாண்டியன் முறைப்படி பட்டம் சூடுவதற்கு உரிய சுந்தரபாண்டியனைப் புறக்கணித்துவிட்ட...