இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி- பொருள்

               தாயுமானவர் - பைங்கிளிக்கண்ணி   1.    அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்   சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே.   2.    அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்   சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே.   3.    ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்   பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே.   4.    ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து   சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே.   5.    ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்   கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே.   பொருள் :   1. முதலும் முடிவும் இது  தான் என்று  அளவிட முடியாத  அருட்பெருஞ்சோதியான இறைவன் என் அறிவில் தங்கி , எனக்கு அருள்  செய்வாரோ சொல் பைங்கிளியே!   2.  பைங்கிளியே! என் மனதின்கண் பொருந்தியிருக்கின்ற இறைவனிடம் நீ  சென்று , என் து...

அருட் பிரகாச வள்ளலார் - பிள்ளைச் சிறு விண்ணப்பம்

        அருட் பிரகாச வள்ளலார் - பிள்ளைச்    சிறு விண்ணப்பம்          பிள்ளைப் பருவத்துத்தில் உள்ளத்தில் எழும் எண்ணங்களை சிலவற்றை இறைவனிடம்   விண்ணப்பம் செய்வது. பாடல் 1.      தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்           தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்      பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்           பேசிய தந்தையும் தாயும்      பொடித்திரு மேனி அம்பலத் தாடும்           புனிதநீ ஆதலால் என்னை      அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்           அம்மைஅப் பாஇனி ஆற்றேன். பொருள் :      அம்மையும் அப்பனுமாகிய பெருமானே , வளர்ச்சியினால்   உடல் தடித்த மகன் செய்த தவறைக்   கண்டு தந்தை மகனை அடிப்பானாயின் , உடனே தாய் அங்கு செ...

அற்புதத் திருவந்தாதி -காரைக்காலம்மையார் - விளக்கம்

  அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார் - விளக்கம்   பாடல் எண் 1 : பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.   பொருள்   பிறந்து மொழியை அறிந்து பேசத்   தொடங்கிய காலம் முதல் எக்காலமும் அன்புடன் உனது திருவடியினையே சேர்ந்தேன் .   நஞ்சு கலந்த அமுதத்தைப் பருக்கியதால் கருமையான கண்டத்தை உடைய   இறைவனே   எனது துன்பத்தைத் தீர்ப்பது எப்போது ?.     பாடல் எண்   2 இடர்களையா ரேனு மெமக்கிரங்கா ரேனும் படரு நெறிபணியா ரேனுஞ் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு.   விளக்கம்   எனது இறைவன் எனக்குப் பிறவித்துன்பத்தை நீக்கலாம். அவ்வாறு நீக்காவிடினும் பரவாயில்லை . என்மேல் இரக்கம் வைக்கலாம் .   அது செய்யாவிடினும்  நான் செல்ல வேண்டிய நெறியினையேனும் பணிக்கலாம்.இவை எதுவுமே செய்யவில்லை எனினும்   என் நெஞ்சம்    அவரிடம் கொண்ட அன்பு என்றும் நீங...

நிழல்கள் - கவிஞர் மு.மேத்தா - விளக்கம்

  நிழல்கள் -   கவிஞர் மு.மேத்தா சூரிய நெருப்பு சுடுகிற பாதத்தில் ஒத்தடம் கொடுக்கும் நிழல் ஒற்றர்கள் . வெய்யில் தாங்காமல் விரைந்து வரும் காலுக்குச் சிறிது நேரச் செருப்புகள் ! வெளிச்சத்தின் காலடிச் சுவடுகள் ! விளக்கம்       சூரியானது ஒளிக்கதிர்கள் நெருப்பாய் நம்மைச் சுடும்போது நம் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் ஒற்றர்கள் தான் இந்த நிழல்கள்.          வெயில் தாங்காமல் நிழலைத் தேடி விரைந்து ஓடும் பாதங்களுக்குச் சிறிது நேரடிக்கிற்கு செருப்பாய்   இருப்பது நிழல்கள். நிழல்கள்   என்பவை வெளிச்சத்தின் காலடிச்   சுவாடுகளாக இருக்கின்றன.    

ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது கவிஞர் மு.மேத்தா -விளக்கம்

  ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது   கவிஞர் மு.மேத்தா முகவரி சரியாக எழுதப்படாத ஒரு கடிதம் எங்கெங்கோ சென்று முட்டி மோதி அலைந்துவிட்டு என்னிடமே திரும்பி விட்டது . ஒரு கடிதம் அனாதையாகிவிட்டது! சேரும் முகவரி சரியில்லை அனுப்பிய முகவரி அதில் இல்லை பற்பல ஊர்களின் முத்திரை பதிந்தது ! பற்பல தெருக்களில் விசாரணை நடந்தது! பற்பல தினங்கள் பறந்து கடந்தது! பிறந்த இடத்தின் பெயரே இல்லை! புகுந்த இடமோ புரியவில்லை! அந்தக் கடிதத்தை அஞ்சல் நிலையங்கள் ஆராய்கள் செய்தன! ஒட்டியிருந்த உறையின் உள்ளே இருந்த தாளில் எழுதியிருந்தது இப்படி! “ஒருவாரத்திற்குள் உங்கள் பதில் வரவேண்டும் இல்லாவிட்டால் உயிர்ப் பறவை சிறகடிக்கும் கடைசி முத்தமிட என் கல்லறைக்கு வரலாம்”. விளக்கம் கடிதம் என்பது வெறும் காகிதம் மட்டும் இல்லை. அது ஒருவரின் மன வெளிப்பாடு. அதில் சேர வேண்டிய முகவரியும் , அனுப்புபவரின் முகவரியும் தெளிவாக எழுதப்படவில்லையெனில் அக்கடிதம் உரியவரிடம் சேராமல் அஞ்சல் நிலையங்களையே சுற்றி வரும். சில நேரங்களில் அனுப்பியவருக்கே போய்ச் சேர்ந்து விடும் . அப்பட...