இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டுச் சருக்கம் - சுரமை நாட்டின் சிறப்பு -சூளாமணி- விளக்கம்

              நாட்டுச் சருக்கம்   - சுரமை நாட்டின் சிறப்பு   மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்   இஞ்சிசூழ் அணி நகர் இருக்கை நாடது   விஞ்சைநீள் உலகுடன் விழாக் கொண்டன்னது   துஞ்சுநீள் நிதியது சுரைமை என்பவே.   பொருள்:   மேகங்களால் சூழப் பெற்ற அரிய மணிகளை உடைய கோடிக்குன்றம்  என்னும் மலையைத்   தன் கைகளால் தூக்கிய திருமாலின் அவதாரமாகக்  கருதப்படுபவன்   திவிட்டன். அவன் அரசு வீற்றிருக்கின்ற , மதில்கள் சூழ்ந்த  அழகிய போதனம் என்னும் நகரம் சுரமை நாட்டில் உள்ளது. அது தேவர்  உலகத்தைக் காட்டிலும் செல்வவளத்தால் சிறப்புடைய நாடாகக்  காட்சியளிக்கின்றது.   சொன்னநீர் வளமைத் தாய சுரமை நாட்டகணி சார்ந்து   மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட   பொன்னவிர் புரிசை வேலிப்போதன மென்ப துண்டோர்   நன்னகர் நாகலோக நகுவதொத் தினிய தொன்றே.   பொருள் : நீர் வளமை உடைய சுரமை நாட்டின் நடுவில் அமைந்துள்ளது போதன  மாநகரம். அந்நாட்டு அரசன் வீற்ற...

தம்பிக்கு - மு வ-தமிழ்ப்பற்று

  தம்பிக்கு - மு வ- தமிழ்ப்பற்று தம்பிக்கு என்னும் தலைப்பில் மு வ அவர்கள் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார் அதில் நமக்கு பாடத்திட்டமாக இருப்பது எழில் என்பவருக்கு எழுதிய மற்றொரு கடிதம். அதில் மு வ வளவன் எனும் பெயரில் எழுதிய கடிதங்கள் அனைத்தும் மிகவும் மிகவும் சிந்திக்க வைக்கக்  கூடியதாக இருக்கின்றன. எழிலுக்கு எழுதிய இந்த இரண்டாம் கடிதத்தில் எழிலின் தமிழ்ப்  பற்று  பற்றி  பேசுகிறார்.    தமிழ்ப்பற்று  வளவன் தான் ஒரு சர்வாதிகாரியாக ஆகும் நிலை ஏற்பட்டால், 1.திருக்குறள் ஓதிதான் திருமணம் தமிழ்நாட்டு நடக்க வேண்டும் அப்படி நடக்கும் திருமணங்கள் மட்டும்தான் செல்லுபடி ஆகும் என்றும், 2.தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ் மறைகளை ஓதாத கோயில்கள் தமிழ்நாட்டில் திறந்தே இருக்கக் கூடாது என்றும், 3.தமிழில் உத்தரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும், 4.தமிழ்நாட்டு கவர்னர்  தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆணையிடுவேன் என்று எழுதியிருக்கிறான்.   வீண் கனவு உன்னுடைய...

மு வ கடிதம் -தேர்வு நோக்கில் - சுருக்கமாக

                                                             மு வ கடிதம்    தம்பிக்கு என்னும் தலைப்பில் மு வ அவர்கள் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார் அதில் நமக்கு பாடத்திட்டமாக இருப்பது எழில் என்பவருக்கு எழுதிய கடிதம் முதல் கடிதம். அதில் மு வ வளவன் எனும் பெயரில் எழுதிய கடிதங்கள் அனைத்தும் மிகவும் மிகவும் சிந்திக்க வைக்கக்  கூடியதாக இருக்கின்றன.     எழில் எழுதியவை தன் அன்னைக்கு எழில் எழுதிய கடிதங்களை அன்னையின் அனுமதியோடு படித்துவிட்டு விடை எழுதுகிறார்.  அந்தக்  கடிதங்கள் மிகவும் சுவையாக இருந்தன என்றும் அவை அனைத்தும் என் அன்னைக்கு நீ எழுதிய கடிதங்கள் தானே நான் எப்படி படித்தேன் என்று உனக்கு தோன்றலாம் . உன் கடிதங்கள் அன்னை மட்டுமல்லாமல் நானும் படிப்பதற்கு தகுதியானவை தான், படிக்க வேண்டிய கடிதங்கள் தான் என்று காரணம் கூறுகிறார்.   அன்னையைக்  கேட்டுப்  படித்தேன்  ஒருவர் மற்றொருவ...

முரசொலி கடிதம்-செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்-சுருக்கம்

            முரசொலி கடிதம்-செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்   உடன்பிறப்புகளிடம் , ஓய்வுக்காக  வந்திருக்கிறேன்   என்று நீங்கள் நினைக்க  வேண்டாம்.   ஒப்பற்ற முறையில் நடக்கவிருக்கும்  உலகத் தமிழர் செம்மொழி  மாநாட்டிற்குக் ஒரு தோரணவாயில்  அமைக்கின்ற ஆர்வத்தோடு. இந்த ஓய்வைப்  பயன் படுத்திக்கொள்கிறதாகக்   கூறுகிறார். 8 உலகத் தமிழ் மாநாடுகள் : அறிஞர் அண்ணா   அவர்கள் தமிழகத்தில்  முன்னின்று 1967ஆம் ஆண்டு  முதலமைச்சராக  நடத்திய இரண்டாம் மாநாட்டினையும் சேர்த்து,  இதுவரை  உலகத்  தமிழ் மாநாடு என்ற   பெயரில்  எட்டு மாநாடுகள் நடந்தேறியுள்ளன. அறிஞர் அண்ணாவும் உலகத் தமிழ் மாநாடும் : அண்ணா உலகத் தமிழ் மாநாட்டில் கீழ்க்  கண்டவாறு பேசியதாக கலைஞர்  கூறுகிறார்.  துல்லியமாக எண்ணங்களை  வெளிப்படுத்திடும்.   சொல்வளம் மிகவும்  படைத்தது உணர்வுகளை நுட்பமாகவும்  நுண்ணியமாகவும் நேர்மையாகவும்  நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் மிக்கத...