இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீன்கள்- வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ- தமிழ்ஒளி- பொருள்

    மீன்கள் - வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ-   தமிழ்ஒளி    (இயற்பெயர்: விசயரங்கம் , 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.  கவிஞனின் காதல் நிலை பெற்ற சிலை வீராயி மே தின ரோசா விதியோ வீணையோ கண்ணப்பன் கிளிகள் புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்) கோசலக் குமாரி வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ-ஏழை வாழும் குடிசையின் பொத்தல்களோ ? மாநில மீதில் உழைப்ப வர்கள்-உடல் வாய்ந்த தழும்புக ளோஅவைகள் ? செந்தமிழ் நாட்டினர் கண்களெல்லாம்-அங்குச் சேர்ந்து துடித்துக் கிடந்தனவோ ? சொந்த உரிமை இழந்திருக்கும்-பெண்கள் சோக உணர்ச்சிச் சிதறல்களோ ? இரவெனும் வறுமையின் கந்தல்உடை-தனில் எண்ணற்ற கண்களோ விண்மீன்கள் ? அருந்தக்கூ ழின்றியே வாடுபவர்-கண்ணீர் அருவித் துளிகளோ வான்குன்றிலே ? காலம் எழுதும் எழுத்துக்களோ-பிச்சைக் காரர் இதயத்தின் விம்மல்களோ ? நீலக் கண்ணாடியின் கோட்டையிலே-மின்னல் நெளிவை இறைத்திட்ட அற்புதமோ ? வெய்யில் அரசாங்கம...

கத்தியின்றி ரத்தமின்றி- நாமக்கல் கவிஞர் - பொருள்- விளக்கம்

  கத்தியின்றி ரத்தமின்றி- நாமக்கல்   கவிஞர்  பொருள்- விளக்கம் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி) ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி) குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி) கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி) கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி) காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி) பொருள்: மகாத்மா காந்தியின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களை எழுதிய காந்தியக்   கவிஞர் என்றழைக்கபடும் நாமக்கல்   கவிஞர் எழுதியப் பாடல் இது.  கத்தியும்   ரத்தமும்   இல்லாமல் ஒரு யுத்தம் வருகின்றது.  சத்தியத்தை நம்புகின்ற யாவரும் இதில் கலந்து கொள்ள வார...

முக்கூடற் பள்ளு-மழை அறிகுறிப் பாடல் -ஆற்று வெள்ளம் நாளை வரத்-பொருள்

  முக்கூடற் பள்ளு மழை அறிகுறிப் பாடல்      முக்கூடற் பள்ளு , உழவையும் அத்தொழிலை வாழ்வாகக்   கொண்டவர்களையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டது . பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதிலும் , அப்பாடல்கள் ஓசை நயங்கள் நிறந்தவை . திருநெல்வேலியில் சீவலப்பேரி என்று வழங்கும்    முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர்மீது பாடப்பட்டது . தாமிரபரணி , சிற்றாறு , கயத்தாறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே முக்கூடல் எனப்படும் . பாடியவர் யாரென்று அறிய முடியாத நூலாகும்.   ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் , ஈழமின்னல் சூழ மின்னுதே! நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே - கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே - மழை தேடி ஒருகோடி வானம் பாடி ஆடுதே! போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் , பண்ணைச் சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.                  பொருள்   ...

அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்- கலையாத கல்வியும்-பொருள்

         அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்- கலையாத கல்வியும்-பொருள்     அபிராமி அந்தாதி என்பது அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் பெயரில் பாடப்பட்டது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்) , வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையுங் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே! பொருள்:   முழுமையான அறிவு தரும் கல்வி , நீண்ட ஆயுள் , உண்மையான , ஆபத்ததி்ல் உதவும் ந...

நாராய் நாராய் செங்கால் நாராய்-சத்திமுத்த புலவர்-பொருள் - விளக்கம்

     நாராய் நாராய் செங்கால் நாராய்-சத்திமுத்த புலவர்   நாரைவிடு தூது என்ற நூலின் ஆசிரியர் சத்திமுத்தப்புலவர்.     சத்தி முத்தம் என்ற ஊரில் பிறந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று   அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை.     நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன   பவளக் கூர்வாய் செங்கால் நாராய்   நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி   வடதிசைக்கு ஏகுவீராயின்   எம்மூர்ச் சத்தி முத்த வாவியுட் தங்கி   நனை சுவர் கூரை கனை   குரற் பல்லி   பாடு பார்த்திருக்கும் மனைவியைக்   கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில்   ஆடையின்றி வாடையில் மெலிந்து   கையது கொண்டு மெய்யது பொத்திக்   காலது கொண்டு மேலது தழீஇ   பேழையுள் இருக்கும் பாம்பென் உயிர்க்கும்   ஏழையாளனைக் கண்டனம் எனுமே!   பொருள்:   பனங்கிழங்கை இரண்டாகப்   பிளந்தது   போல அலகு கொண்ட நாரையே   நீயும் உன் இல்லாள...

வீரராகவர் பாடல்- இம்பர் வான் எல்லை இராமனையே பாடி - பொருள்- விளக்கம்

    வீரராகவர் பாடல்- இம்பர் வான் எல்லை இராமனையே பாடி இவர் தந்தையார் வடுகநாதர் . வீரராகவர் பிறவியிலேயே கண்  இழந்தவர்.  கேள்வி வாயிலாகக் கல்வி கற்றார். திருக்கழுக்குன்ற ப் புராணம், திருக்கழுக்குன்ற  மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்,திருவேங்கட கலம்பகம் போன்றவை ஆகும் . வீரராகவர் இயற்றிய 39 பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றுள்ளன.   இம்பர் வான் எல்லை இராமனையே பாடி என் கொணர்ந்தாய் பாண  நீ என்றாள் நீ பாணி  வம்பதாங் கபைமென்றேன் பூசுமென்றாள்  மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்  பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்  கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்   கைமா என்றேன் சும்மா கலங்கினாளே . பொருள்: அரசனை புகழ்ந்து பாடி யானையைப் பரிசாகப் பெற்ற புலவன்  வீட்டிற்கு வருகின்றான். வறுமையில் இருந்த மனைவி என்ன பெற்று  வந்திருக்கின்றாய் என்று கேட்கின்றாள். களபம் என்று சொல்ல  சந்தனம் என்று நினைத்து நீ பூசிக்கொள் என்கின்றாள் .மாதங்கம்  என்று  சொல்ல தங்கம் என்று நினைத்து நாம் நன்றாக வாழலாம்  என்...

திருவரங்கக் கலம்பகம்- அழகிய மணவாளதாசர் -பொருள் - விளக்கம்

  திருவரங்கக் கலம்பகம்- அழகிய மணவாளதாசர்   திருவரங்கக்கலம்பகம் பாடியவர் அழகியமணவாளதாசர் . அழகியமணவாளதாசரை ' பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் என்றும் அழைப்பர். இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார் இதனை அஷ்ட பிரபந்தம்' என்றும் அழைப்பர். திருவரங்கத்தில்     துயில்கொள்ளும் அரங்கநாதனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது   திருவரங்க கலம்பகம். அம்மானை , இரங்கல், ஊசல், ஊர் கலி, காலம், குறம், கைக்கிளை, சம்பிரதம், சித்து, தவம், தழை, நாரை, பாண், புயவகுப்பு, மடக்கு, மதங்கு மறம், மேகம், வண்டு முதலிய உறுப்புகள் அமைய பாடப்பட்டுள்ளது. திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல்திருநாமம் ,  திருவேங்கடமாலை , திருவோங்கடத்தந்தாதி போன்ற நூல்களை  எ ழுதியுள்ளார்.   பாடல்   பேசவந்த தூதசெல்லரித்த வோலை செல்லுமோ பெருவரங்களருளரங்கர் பின்னைகேள்வர் நாளிலே பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே பட்டமன்னர்பட்ட தெங்கள்பதி புகுந்து பாரடா வாசலுக்கிடும் படல்களித்து வந்தகவி கைமா மகுடகோடி தினையளக்க வைத்தகாலும்   நாழியும் வீசுசாமரங் குற்றொடுத்த கற்றை கற்றிலும் வேலியி...

காளமேகப் புலவர் - முத்திருக்கும் கொம்பசைக்கும் - பொருள் - விளக்கம்

  காளமேகப் புலவர் - முத்திருக்கும் கொம்பசைக்கும்-பொருள்- விளக்கம்     திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்" பாடி அவரை வென்றவர். திருவரங்கம் பெரிய கோயிலில் மடப் பள்ளியில் சமையல் தொழில் செய்தவர். வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பாடல் புனைந்தவர். திருவானைக்கா உலா , சரசுவதி மாலை , பரப்பிரம்ம விளக்கம் , சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும் , நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார். பாடல் முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண் டேந்திவரும் கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – ஏத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம். பொருள் : ஒரே பாடலில் ஆமணக்கு மற்றும் யானையின் ஒற்றுமையைப் பாடியுள்ளார். ஆமணக்குச் செடியில் ஆமணக்குக் கொட்டைமுத்து இருக்கும். ஊன்றுகோல் போன்ற  தன் கொம்பை அசைக்கும். உள்ளே துளை உள்ள மூரித்தண்டு ஏந்தி வளரும். கொத்தாக இருக்கும் ஆமணக்குக் குலையை நேரே உயர்த்தித் தலையைச் சாய்...

ஔவையார்- வான்குருவியின் கூடு-பொருள்-விளக்கம்

  ஔவையார்- வான்குருவியின் கூடு-பொருள்-விளக்கம் பாடல்   வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண் எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது   பொருள்:   தூக்கணாங்குருவியின் கூடும், உறுதியான அரக்கும், கரையான் புற்ரையும், தேன் கூட்டினையும் ம, சிலந்தியின் வலையும் நம்மால் செய்ய முடியாது   அவை அரிதானவையாகும். அதனால் நான் உயர்ந்தவன் என்று நம்மை நாமே உயர்வாக எண்ணக் கூடாது. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று அவரால் சிறப்பாக செய்ய முடிந்த ஒன்றாக இருக்கும் என்பதை உணர வேண்டும் .

கலிங்கத்துப்பரணி-விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண-செயங்கொண்டார்- விளக்கம்- பொருள்

கலிங்கத்துப்பரணி   கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி   வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப்போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக்   கொண்டு பாடப்பட்டது . அனந்தவர்மன் என்னும் கலிங்க மன்னன் திறை கொடுக்காததன்   காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரன் போரில் வெற்றி பெற்றதே இதன் ‌பாடுபொருள்.   பெயர் :   பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழக்கத்திற்ககு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரால் இந்நூல் பாடப்பட்டுள்ளது. தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூலி கலிங்கத்துப் பரணி ஆகும் . இது பிற்காலப் பரணி நூல்களுக்கு முன்னோடியாய்   அமைந்த நூலாகும். ஆசிரியர் செயங்கொண்டார்   முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவர்க திகழ்ந் தவர். இவர் கலிங்கத்துப்பரணி   தவிர புகார் நகர வணிகர் பெருமக்களைச் சிறப்பித்து இசையாயிரம் என்ற நூலை பாடியுள்ளார்.     பரணி   -விளக்கம்:     ...