இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறள் -அறன் வலியுறுத்தல் -31-40

                   திருக்குறள் - அறன் வலியுறுத்தல் -31-40    31.          சிறப்பு ஈனும் ; செல்வமும் ஈனும் ; அறத்தின் ஊஉங்கு      ஆக்கம் எவனோ , உயிர்க்கு.       பொருள் :  பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய  அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. 32.          அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை ; அதனை       மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.   பொருள் : ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை ;  அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை     33.          ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே      செல்லும் வாய் எல்லாம் செயல்.       பொருள் :  பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய...

திருக்குறள்- நீத்தார் பெருமை - 21-30

                    திருக்குறள்- நீத்தார் பெருமை  -   21-30   21.    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து      வேண்டும்- பனுவல் துணிவு. பொருள் : ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப்  போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும். 22.     துறந்தார் பெருமை துணைக் கூறின் , வையத்து      இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.         பொருள் : பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல் , உலகத்தில்    இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது. 23.    இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்       பெருமை பிறங்கிற்று , உலகு. பொருள் : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை  ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது. 24.    உரன் என்னும் தோட்டியான் , ஓர் ஐந்தும் காப்பான்    ...

வான் சிறப்பு - திருக்குறள் - 21-30

                  வான் சிறப்பு - திருக்குறள் -  11-20   11.     வான் நின்று உலகம் வழங்கி வருதலான் ,       தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று. பொருள் : மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால் , மழையானது உலகத்து வாழும்  உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.   12.     துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி , துப்பார்க்குத்       துப்பு ஆயதூஉம் மழை.       பொருள் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு ,  பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.     13 .     விண் இன்று பொய்ப்பின் , விரிநீர் வியன் உலகத்து-      உள் நின்று உடற்றும் பசி.    பொருள் : மழை பெய்யாமல் பொய்படுமானால் , கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக  இருந்தும்  பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.     14.     ஏரின் உழாஅர் உழவர் , புயல்...

கடவுள் வாழ்த்து - thirukkural - திருக்குறள்

                     கடவுள் வாழ்த்து -  thirukkural  - திருக்குறள்  1. அகரம் முதல , எழுத்து எல்லாம் ; ஆதி-     பகவன் முதற்றே , உலகு.   பொருள் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.  அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.    2. கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்   நல் தாள் தொழாஅர் எனின் ?. பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத்  தொழாமல் இருப்பாரானால் , அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ?  3. மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்   நிலமிசை நீடு வாழ்வார். பொருள் : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை  இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.  4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு   யாண்டும் இடும்பை இல. பொருள் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி  நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்தில...