இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வண்மையும் வறுமையும் - தமிழின்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை

                                  தமிழின்பம்    -    ரா. பி. சேதுப்பிள்ளை   ரா.பி. சேதுப்பிள்ளை தமிழறிஞர் , எழுத்தாளர் , வழக்குரைஞர் , மேடைப்பேச்சாளர் என்ற பன்முகம் கொண்டவர். இவரது பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950 ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்றும் விருது வழங்கியது. இவரது தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாதெமி பரிசு வழங்கப்பட்டது. அந்நூலில் அறிவும் திருவும் என்ற ஐந்தாம் பிரிவில் காயும் கனியும் , சேரனும் கீரனும் , காரியும் மாரியும், அழகும் முத்தும் மற்றும் வண்மையும்  வறுமையும்  என்ற ஐந்து கட்டுரைகள்  இடம் பெற்றுள்ளன.                                    வண்மையும் வறுமையும்   பழந் தமிழ்நாட்டு வள்ளல்களாய் விளங்கிய பாரியும் ஓரியும் , ஆயும் அதிகனும் , மலையனும் பேகனும் மாண்ட பின்னர் , முதிராத வளமுடைய முதிர  ...

பூப்பறிக்க வருகிறோம்

                        பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் ? எந்த மாதம் வருகிறீர் ? ஐப்பசி மாதம் வருகிறோம் ஐப்பசி மாதம் வருகிறோம் எந்தப் பூவைப் பறிக்கிறீர் ? எந்தப் பூவைப் பறிக்கிறீர் ? தேவி பூவைப் பறிக்கிறோம் தேவி பூவைப் பறிக்கிறோம் யாரை விட்டுப் பறிக்கிறீர் ? யாரை விட்டுப் பறிக்கிறீர் ? எழிலை விட்டுப் பறிக்கிறோம் எழிலை விட்டுப் பறிக்கிறோம் என்று வந்து பறிக்கிறீர் ? என்று வந்து பறிக்கிறீர் ? இன்று வந்து பறிக்கிறோம் இன்று வந்து பறிக்கிறோம்.

ஏற்றப்பாட்டு - பிள்ளையாரே வாரும்

                                                    ஏற்றப்பாட்டு நாட்டுப் புறப் பாடல் வகைகளுள் ஏற்றப்பாட்டு தனிச் சிறப்பு வாய்ந்தது. வேளாண் தொழிலில் விதை விதைத்து நீர் பாய்ச்சி களையெடுத்து கதிர் அறுத்து போரடித்து வண்டியில் ஏற்றிச் சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே அதிகாலையில் இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாட்டு என்றழைககப்படும். ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் செர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல் காணப்படும். இதனாலேயே ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை என்பர்.     ...

அயோத்தி என்றொரு ராஜ்யமாம் - ஏற்றப்பாட்டு

  ஏற்றப்பாட்டு நாட்டுப் புறப் பாடல் வகைகளுள் ஏற்றப்பாட்டு தனிச் சிறப்பு வாய்ந்தது. வேளாண் தொழிலில் விதை விதைத்து நீர் பாய்ச்சி களையெடுத்து கதிர் அறுத்து போரடித்து வண்டியில் ஏற்றிச் சொல்லும் வரை பல வளர்ச்சிப் படிகள் உள்ளன. பழங்காலத்தில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்றத்தின் மூலமாகவே அதிகாலையில் இறைத்து நீர்ப் பாய்ச்சினர். இவ்வாறு ஏற்றம் இறைக்கும் போது பாடப்படும் பாடல் ஏற்றப்பாட்டு என்றழைககப்படும். ஏற்றத்தின் கீழே சாலைப் பிடித்துக் கவிழ்ப்பவர் பாடலின் ஒவ்வொரு அடியையும் பாடுவார். ஏற்றத்தின் மிதி மரத்தில் இருப்போர் ஒன்றாகச் செர்ந்து அவ்வடியைத் திரும்பப் பாடுவர். மிதி மரத்தில் இருப்போர் பாடி முடித்தபின் அடுத்த அடியைச் சால் பிடிப்பவர் பாட வேண்டும். இவ்வாறு ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து இப்பாடல் காணப்படும். இதனாலேயே ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை என்பர்.                  அயோத்தி என்றொரு ராஜ்யமாம்    அயோத்தி என்றொரு ராஜ்யமாம் அதனைத் தசரதர் ஆண்டனராம் அவருக்கு மூன்று மனைவியராம் ...

அம்பா பாடல்கள் - விடிவெள்ளி நம்விளக்கு

                        அம்பா பாடல்கள்   அம் என்றால் அழகு என்றும் பா என்றால் பாடல் என்றும் பொருள் பெறும். அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும்.   இந்த அம்பி சம்பந்தமாக இப்பாடல்கள் எழுந்தமையினால் அம்பிப்பாடல் என்றொரு சொல் உருவாக்கப்பட்டு இச்சொல்லே காலம் செல்லச் செல்ல சிதைந்து அம்பாகவும் மாறியிருக்கலாம் என்று இலங்கையைச் சேர்ந்த புஷ்பராஜன் அவர்கள் தனது சொற்பிறப்பியல் விளக்கம் தந்துள்ளார். விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா அடிக்கும் அலையே நம்தோழன் – ஐலசா அருமை மேகம் நமது குடை- ஐலசா பாயும் புயல் நம் ஊஞ்சல்- ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை- ஐலசா காயும் ரவிச்சுடர்கூரை- ஐலசா கட்டு மரம் வாழும் வீடு- ஐலசா பின்னல் வலை அரிச்சுவடி- ஐலசா பிடிக்கும் மீன்கள் நம் பொருட்கள்- ஐலசா மின்னல் இடி காணும் கூத்து – ஐலசா வெண்மணலே பஞ்சுமெத்தை- ஐலசா முழுநிலாதான் கண்ணாடி- ஐலசா மூச்சடக்கி நீந்தல் யோகம்- ஐலசா தொழும் தலைவன் பெருவா...