இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

                            பதினெண்கீழ்க்கணக்கு    நூல்கள் சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச்  சேர்த்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று  வழங்கலானது . 1. இன்னா நாற்பது 2. இனியவை நாற்பது 3. கார் நாற்பது 4. களவழி நாற்பது 5. ஐந்திணை ஐம்பது 6. ஐந்திணை எழுபது 7. திணைமொழி ஐம்பது 8. கைந்நிலை 9. திருக்குறள் 11. நான்மணிக்கடிகை 12. ஆசாரக்கோவை 13. திணைமாலை நூற்றைம்பது 14. பழமொழி நானூறு 15. சிறுபஞ்சமூலம் 16. முதுமொழிக்காஞ்சி 17. ஏலாதி 18. திரிகடுகம்   அறநூல்கள் – 11    அகநூல்கள் – 6     புறநூல் – 1           அறநூல்கள் – 11 • நூல்கள் ஆசிரியர்கள் • நாலடியார் - சமணமுனிவர்கள் • நான்மணிக்கடிகை -விளம்பிநாகனார் • இன்னா நாற்பது - கபிலர் • இனியவை நாற்பது -பூதஞ்சேந்தனார் • திரிகடுகம் - நல்லாதனார் • ஆசாரக்கோவை - பெருவாயின்முள்ளியார் • பழமொழி- முன்றுரையரையனார் • சிறுபஞ்சமூலம்- காரியாசன் • ஏலாதி - கணிமேதாவியர் • திருக்...

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்

  குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல் நூற்குறிப்பு:   குற்றாலம் என்பது தமிழகத்தில் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி வட்டாரத்தில் உள்ள ஊர் ஆகும். இந்த இடத்தில் குறும்பலா மரத்தின் அடியில் சிவபெருமான எழுந்து அருளி உள்ளான். இந்த இறைவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நூலின் ஆசிரியர் திரிகூட  ராசப்பக் கவிராயர் ஆவார்.  இந்த நூலில் 128 பாடல்கள் உள்ளன . குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை  அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் சார்ந்தவர். திருக்குற்றால நாதாரின் முன்னிமையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.     வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்    மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்    கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித்...

சிறப்புத்தமிழ்- சீறாப்புராணம்- உமறுபுலவர்

                சீறாப்புராணம்-   உமறுபுலவர்     வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றை யோர்க்கும் ஊனுடைய  பல்லுயிர்க்கும் உணர்வரிய  பேரொளியாய்  ஓங்கி நின்ற ஞானமெனும் பரம்பொருளே  அழியாத பெரும் பேறே  நடுநின் ரென்றும் ஊனமற்  வினையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே பொருள் விளக்கம்: வானத்து தேவர்களும் தூதுவர்களும் திருக்குரானைத்   தெளிவாய் கற்று தேர்ந்தவர்கள்.  உன்னுடைய பல உயிர்களும்  உணர்வதற்கு அரியவனாக விளங்குபவனே. மிகுந்த ஒளியாய் ஓங்கி  நின்றவனே, ஞானப் பரம்பொருளே அறியாத பெரும்  செல்வமே, நடுவு  நிலைமையில் நிற்பவனே ,குற்றம் அற்ற முறையில் வினைகளை  ஆராய்ந்து தருபவனே எல்லா இடங்களிலும் எப்போதும் வாழ்கின்ற  அரசனே என இறைவனது  பெருமையைப்  பாராட்டுகின்றார் உமறுபுலவர்.  

சிறப்புத்தமிழ் - நல்லதோர் வீணை- பாரதியார்

                              நல்லதோர் வீணை-  பாரதியார்  நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ? சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ , – இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?   சொல்லடி , சிவசக்தி –   நிலச் சுமையென வா ழ்ந்திடப் புரிகுவையோ ? விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன் , நசையறு மனங்கேட்டேன் – நித்தம்  நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் , தசையினைத் தீசுடினும் – சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்   அசைவறு மதிகேட்டேன் – இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ ? பொருள் விளக்கம் : Ø   நல்ல அருமையான ஒரு வீணையை உருவாக்கி விட்டு அதனை  பயன்படுத்தாது குப்பையில் எறிவது என்பது நியாயம் இல்லாத செயல்.   அதுபோல சுடர்மிகு அறிவுடன் என்னை படைத்த சிவசக்தியே இந்த  உலகத்திற்கு என் உழைப்பை தந்திட உறுதியான உடல் வேண்டும்.   அறிவோடு வலிமை பொருந்திய உடலும் இருந்தால்தா...

சிறப்புத்தமிழ் - திருவாய் மொழி- நம்மாழ்வார்- உயர்வு அற உயர் நலம்

             திருவாய் மொழி- நம்மாழ்வார்   உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் ? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் ? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் ? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு , என் மனனே!   இங்கு நமாழ்வார் தனக்கே தன் உள்ளத்திற்கே தன் ஆன்மாவிற்கே  உபதேசிக்கின்றார்.    என் மனமே, தன்னைவிட உயர்வு உடையவர் நலம் உடையவர் யாரும்  இல்லை எனும் பெருமை உடையவர் திருமால்.   நம்முடைய  அறியாமையை நீக்கித்   தெளிவான அறிவைத்   தருபவர்.   தேவர்களின்  தலைவர்.   அத்தகைய பரம்பொருளாகிய திருமாலின் திருவடிகளைத்  தொழுது பிறவித் துன்பத்தைத்   தீர்த்துக்கொண்டு அறியாமையில் இருந்து  மீண்டு எழுவாயாக. இறைவனின் ஒளிமயமான திருவடி அறியாமை  இருளை அகற்றும் என்ற தத்துவத்தை இப்பாடல் மூலம் தெரிவிக்கின்றார்  நம்மாழ்வார் .