இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார்-பாடலும்-பொருளும்- தமிழ்த் தெய்வ வணக்கம்

        தமிழத் தாய் வாழ்த்து – பெ.சுந்தரனார் பெ. சுந்தரனாரால் எழுதப்பட்ட மனோன்மணீயம் என்னும் நூலில் தமிழ் தெய்வ  வணக்கமாக வைக்கப்பட்டுள்ளது  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்   தெக்கணமும்   அதிற்சிறந்த   திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல்   அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ் த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும்   கவின்மலையாளமும் துளுவும்   உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல்   உலகவழக்கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழத்துதுமே வாழத்துதுமே வாழத்துதுமே   ஒலி எழுப்பும் நீர் நிறைந்த கடலை ஆடையாக அணிந்த நிலம் எனும் பெண்ணே, இப்பரத கண்டம் உனக்கு அழகு மிளிரும்...

பாரதிதாசன் – சிறுத்தையே வெளியில் வா - பாடல் விளக்கம் - பொருள்

                    பாரதிதாசன் – சிறுத்தையே வெளியில் வா 1891ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கனகசபை மற்றும் இலக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தவராவார். இவரை பெற்றோர்கள் சுப்புரெத்தினம் என்றே அழைத்தனர். ஆனால் இவர் பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றி கொண்டார்.   பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா ? கைவிரித் துவந்த கயவர் , நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில் , வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே ? மொழிப்பற் றெங்கே ? விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குற...

பாரதியார் - எங்கள் தாய் - பாடல் -பொருள் - விளக்கம்

           பாரதியார்   -   எங்கள் தாய் தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!   பொருள் : முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும்   நன்கு உணரும் வகையில்   கல்வி பல கற்றவர்களும் கூட   எங்கள் தாய் எப்போது தோன்றியவள் என்று சொல்ல இயலாத அளவிற்கு சிறப்பை உடையவள்.   யாரும் வகுத்தற்கு அரிய பிராயத்தள் ஆயினுமே எங்கள் தாய் - இந்தப் பாருள் எந்நாளும் ஓர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய்   பொருள் : எவ்வளவு சிறந்த   அறிஞராக இருந்தாலும் சரியாக வகுத்துச்  சொல்ல முடியாத அளவு வயதினை உடையவள் எங்கள் தாய்.  ஆனாலும் எங்கள்  தாய் இந்த உலகில் எப்போதும் ஒரு  கன்னிகை போல் இருப்பாள்   முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்   பொருள் : முப்பது கோடி மக்களை உடையவள் . {பாடல் பாடப்பட்ட  காலத்தில்}...