பாத்திர மரபு கூறிய காதை- மணிமேலை
2. மணிமேலை - பாத்திர மரபு கூறிய காதை மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். சிலப்பதிகாரமானது இல்லறத்தையும் , மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதால் , இவை இரட்டைக் காப்பியங்கள் எனப்பட்டன. காப்பிய அமைப்பு மணிமேகலை , சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும் , கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது. பெயர்க் காரணம் இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகல...