மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை 1.மாதா பிதாவை வணங்கு-நாளும் ஆதாரமா யவர் சொல்லுக் கிணங்கு-மதி 2. தந்தைதாய் சாபம்பொல் லாது-அவர் சிந்தைநொந்தால் மக்கள் செல்வம் நில்லாது-மதி 3. மாதா பிதாவுக்கு த்ரோகம்-செய்யும் பாதகரைச் சுற்றும் பாவ மநேகம்-மதி 4. பெற்றவர் நேசத்தைத் தேடு-அவர் குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு-மதி 5. தாய்தந்தைக் குதவாத பிள்ளை-தன தாயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை-மதி 6. கட்டியுனைவளர்க்க நாமே-முன்பு பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே-மதி 7. உள்ளதாய...