சோழர்கள்
சோழர்கள் சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு பிரிவினர். மற்ற இருவர் சேரர்களும் , பாண்டியர்களும் ஆவர். ' சோழ நாடு சோறுடைத்து ' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு ' சோறநாடு ' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர் ஆய்வாளர் . தேவநேயப் பாவாணர் நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். பரிமேலழகர் சேரர் , பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழர்கள் சான்றுகள் இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிக்க உதவுகின்றன. அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் ( Periplus of the Erythr...