சமூக மறுமலர்ச்சி
சமூக மறுமலர்ச்சி குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு: சாதி என்பது தொழிலோடு தொடர்பு உடையது. இந்தச் சாதியினர் இந்தத் தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்பது சாத்திர விதி. அதை மீறக் கூடாது என்ற நிலை இருந்தது. தென்னிந்திய நல உரிமைக் கட்சி (நீதிக்கட்சி) 1920 இல் ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு, பொதுக் கல்விமுறை, அனைவருக்கும் அரசு வேலை போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. 1953 இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் மாகாணத்தில் அனைத்துத் தொடக்கப்பள்ளிக் கூடங்களுக்கான புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி ஒரு குழந்தை பாதிநாள் பள்ளியில் கல்வி கற்க வேண்டும். பின் பாதிந...