இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள்

                                      கீழடி அகழ்வாய்வு அடிப்படைகள் கீழடி தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் அங்கே கீழடி எனும் ஊராட்சியில் பள்ளி சந்தை திடலில் மேட்டுப்பகுதி உள்ளது . அதுவே கீழடி தொல்லியல் களம் . இங்கு தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழ்வாய்வு தொடங்கப்பட்டது தொல்லியல் களம் சுமார் ஆறாம் நூற்றாண்டில் இருந்து ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலங்களாக கருதப்படுகின்றது . கீழடி கொந்தகை, அகரம் , மணலூர் ஆகிய இடங்களில் 2018 இல் ஆய்வுகள் நடத்தப்பட்டதின் விளைவாகவே பொருட்கள்   பல கண்டுபிடிக்கப்பட்டன . அருங்காட்சியகம் இங்கு கண்டு எடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம் அங்கு வைக்கப்பட்டுள்ளது . இவ்வருங்காட்சியகம்   2923 மார்ச் 5ல்   திறக்கப்பட்டது . கீழடி   அகழ்வாய்வின...

பண்டைய தமிழரின் கல்வி

                 பண்டைய தமிழரின் கல்வி கல்வி தற்காலத்தில் மட்டுமல்லாமல் பண்டைய காலத்திலும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது. தமிழ் நூல்கள் பல சங்க காலத்தில் தான் எழுந்தன. சங்க நாளில் ஏறத்தாழ 500 புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களில் பலர் அரசர் குடும்பத்தைச்   சேர்ந்தவர்கள். பெண்டிரும் பாடல் புனைந்து கல்வி கற்றவர்களாக இருந்துள்ளனர்.   குறவர் குடி   பிறந்த குறியெயினியும் இளவெயினியும் குயவர் குடிப்பிறந்த வெண்ணிக் குயத்தியும் சிறந்த புலவர்களாக விளங்கியுள்ளமையும் அறிய முடிகின்றது. சங்க இலக்கியம் பாடிய பெண்பாற்புலவர்கள் மட்டும் மொத்தம் 30 பேர் . பள்ளிக்கூடங்கள் அரசுகள் வந்து பள்ளிகளை நடத்தியதாக அறிய முடியவில்லை அனைத்தும் திண்ணை பள்ளிகளாக இருந்திருக்கலாம் ஆசிரியர்களாக மதுரை கணக்காயனார் என்ற புகழுடன் அறியப்பட்ட நக்கீரரின் தந்தையும், மதுரை ஆசிரியர் நல்லந்தவனார் என ஆசிரியர் பெயர் சேர்த்து அழைக்கப்பட்டனர். குலபதி நக்கண்ணனார் என்பவர் குலபதி என்றே அழைக்கப்பட்டுள்ளார். ...

தமிழர்களின் திணை வாழ்வு - திருமண முறை

      தமிழர்களின் திணை வாழ்வு - திருமண முறை சங்ககால மக்கள் திணை வாழ்வியலை மேற்கொண்டு இருந்தனர்.   அகத்திணை புறத்திணை என்று அதனை இருவகையாக பிரிக்கலாம்.   அகத்திணை என்பது அக வாழ்வைப்   பற்றிக்   கூறுவது. அகத்திணை என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைகளை உள்ளடக்கியது. அகத்திணை மரபு   என்பது ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புற்று மகிழும் ஒழுக்கத்தினை கூறுவர் . புறத்திணை என்பது போர், கொடை, ஈகை பற்றி கூறுவது.   அகத்தினைக்கு மாறான பிற வாழ்வியல் கூறுகளை எல்லாம் புறம் என்று அழைத்தனர். இவ்விரண்டின் அடிப்படையில் உருவானது சங்க இலக்கியம்.   உரிப்பொருள் முல்லைத்   திணைக்கு     இருத்தலும் இருத்தல் நிமித்தமும், குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ,மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்   நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்று உரிப்பொருள்கள்   வரையறை   செய்யப்பட்டுள்ளன.   முதற்பொருள் மற்றும் கருப்பொருள்கள...