பழமொழி நானூறு - முன்றுறை அரையனார் - தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்- விளக்கம் - பொருள்

 

           பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

 

தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்

செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது

நின்னடை யானே நடவத்தா நின்னடை

நின்னின் றறிகிற்பார் இல்.

 

பொருள் :

 

கீழான குணமுடையவர் தம் நடத்தையைத் தாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

 

தாம் எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம் என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.

 

செம்மையான நன்னடத்தையைக் கடைப்பிடிப்பதில்லை.

 

இத்தகைய சிறியார் போல இல்லாமல் நம்முடைய  பெருமைக்கு ஏற்ற

 

நடத்தையைப் பின்பற்ற வேண்டும் .  நாம்  நடத்தையை நம்மைத்  தவிர

 

வேறு யார் அறிந்துகொள்ள  முடியும்.  ஆதலால் உன் பெருமைக்கு ஏற்ற

 

நடத்தையை நீதான் பின்பற்ற வேண்டும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்