நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார் - நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்-விளக்கம்-பொருள்
நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
நிலத்துக்கு
அணியென்ப நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு
அணியென்ப தாமரை; பெண்மை
நலத்துக்கு
அணியென்ப, நாணம்; தனக்கணி
தான்செல்
உலகத்(து) அறம்.
பொருள்
:
நிலத்திற்கு
அழகு சேர்ப்பது நெல்லும் கரும்பும் விளையும் வயல்கள்.
குளத்திற்கு
அழகு சேர்ப்பது தாமரை மலர்கள். பெண்மைக்கு அழகு
சேர்ப்பது
நாணம். அதுபோலத்
தனக்கு அழகு சேர்ப்பது நாம் செய்யும்
அறச்செயல்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக