இனியவை நாற்பது -பூதஞ் சேந்தனார்-இளைமையை மூப்பென் றுணர்தல் இனிதே-பொருள்
இனியவை
நாற்பது -பூதஞ் சேந்தனார்
இளைமையை
மூப்பென் றுணர்தல் இனிதே
கிளைஞர்மாட்
டச்சின்மை கேட்டல் இனிதே
தடமென்
பணைத்தோள் தளிரிய லாரை
லிடமென்
றுணர்தல் இனிது.
பொருள்
இளவயதிலேயே
முதுமையில் வரக்கூடிய மனப்பக்குவம்
கொண்டிருப்பது
இனிதானது . உறவினர்கள் அன்புமொழிகள்
கூறுபவராக இருப்பது
இனிதானது . மென்மையான மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட தளிர்
போன்ற
இளம் பெண்கள் நஞ்சைப் போன்றவர் எனத் தெளிவடைவதும்
இனிதானதாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக