குறுந்தொகை 88. குறிஞ்சி ஒலி வெள் அருவி
குறுந்தொகை 88. குறிஞ்சி ஒலி வெள் அருவி
திணை : மருதம்
பாடியவர் : மதுரைக்
கதக்கண்ணன்
கூற்று :இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி
தலைமகட்குச்
சொல்லியது.
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
பொருள்:
ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய, உயர்ந்த மலைகளுள்ள
நாட்டையுடைய தலைவன்சிறிய கண்ணையுடைய பெரிய களிறு,
வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது, தனது பழைய வலிமையை
இழந்து நிற்கும் . மக்கள் செல்லுவதற்கு அரிய மலைச் சாரலின் வழியே,
தலைவன் இரவில் வருகின்றான் . அங்ஙனம் அவன் வருவதனால் நமக்கு
உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.
கருத்துகள்
கருத்துரையிடுக