மாயூரம் வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை
1.மாதா பிதாவை வணங்கு-நாளும்
ஆதாரமா யவர் சொல்லுக் கிணங்கு-மதி
2. தந்தைதாய்
சாபம்பொல் லாது-அவர்
சிந்தைநொந்தால் மக்கள் செல்வம் நில்லாது-மதி
3. மாதா
பிதாவுக்கு த்ரோகம்-செய்யும்
பாதகரைச் சுற்றும் பாவ மநேகம்-மதி
4. பெற்றவர்
நேசத்தைத் தேடு-அவர்
குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு-மதி
5. தாய்தந்தைக்
குதவாத பிள்ளை-தன
தாயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை-மதி
6. கட்டியுனைவளர்க்க நாமே-முன்பு
பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே-மதி
7.
உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு-செய்யும்
பிள்ளையைத் தன்பிள்ளை யேபழி வாங்கும்-மதி
8. கடலைப்போல்
மாதா சகாயம்-அதற்
குடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ந்யாயம்
9. மதியிது
மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
கருத்துகள்
கருத்துரையிடுக