வான் சிறப்பு - திருக்குறள் - 21-30

                 வான் சிறப்பு - திருக்குறள் -  11-20

 

11.    வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,

      தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.

பொருள் : மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் 

உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

 

12.    துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்

      துப்பு ஆயதூஉம் மழை.     

பொருள் :உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு

பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

  

13.    விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து-

     உள் நின்று உடற்றும் பசி.  

பொருள் :மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக 

இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். 

 

14.    ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும்

      வாரி வளம் குன்றிக்கால்.  

பொருள் : மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உணவுப் பொருள்களை 

உண்டாக்கும் உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

 

15    கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே

      எடுப்பதூஉம், எல்லாம் மழை.     

பொருள் :பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் 

கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

  

16.    விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே

      பசும் புல் தலை காண்பு அரிது.  

பொருள் : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் 

ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

 

 

17.    நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி-

       தான் நல்காது ஆகிவிடின். 

பொருள் :மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல்  

விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

 

18.     சிறப்பொடு பூசனை செல்லாது-வானம்

        வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு.   

பொருள் :மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் 

திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

 

19.    தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்

      வானம் வழங்காது எனின். 

பொருள் :மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச்    

செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

 

20.    நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்

      வான் இன்று அமையாது ஒழுக்கு.

பொருள் :எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்

மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்