சேரர்

 

                          சேரர்

சேரர் பண்டைத் தமிழகத்தில் புகழுடன் விளங்கியவர்கள்

தமிழகத்தின் மேற்குக் கரை சேர நாடு ஆகும்

அந்த நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் சேரர்  ஆவர்.

சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.

மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும்

தலைநகராகக் கொண்டிருந்தனர்.

சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை

உள்ளடக்கியிருந்தது.

சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின.

வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய இன்றைய கேரளாவும்

சேரர்களால்  ஆளப்பட்டது .

தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை அதாவது அமராவதி

ஆற்றின் கரையிலுள்ளது .

 

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவும் , சங்க காலச்

சேரர்களைப் பற்றி  செய்திகள் சிறிதளவும் காணக்கிடைக்கின்றன . சேர

அரசர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத்

தருகின்றன.

 

மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர்.

சங்க நூல்களில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப்

பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடிய தொகுப்பு ஆகும்.

இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

 

சங்ககாலச் சேரர்கள்  

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பாரதப் போரில் பாண்டவர்களுக்கு படைகளுக்கும் உணவிட்டவன்.             

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்   

பல்யானைச் செல்கெழு குட்டுவன் 

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்

சேரன் செங்குட்டுவன்  சேரமான்

சேரமான் பெருஞ்சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரமான்

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்                   

சேரமான் கணைக்கால் இரும்பொறை         

சேரமான் கோக்கோதை மார்பன்              

குட்டுவன் கோதை               

சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை                  

செல்வக் கடுங்கோ வாழியாதன்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை    

இளஞ்சேரல் இரும்பொறை   தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை    சேரமான்

அந்துவஞ்சேரல் இரும்பொறை  போன்ற பல சேர அரசர்களைப் பற்றிய

செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.     

நகரங்கள்

கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை

நகர்களாக விளங்கியன.

துறைமுகம்

முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத்

துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும்

பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின்

இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டி.

 

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்