ஆனாத செல்வத்து - குலசேகர ஆழ்வார்-பொருள்
ஆனாத செல்வத்து - குலசேகர ஆழ்வார்-பொருள்
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
பொருள்:
தேவலோகத்திலே
அரசனான இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும்
இந்திர போகத்தையும், இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும்
அரச போகத்தையும் நான் விரும்ப மாட்டேன் .
இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கட மலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து
திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்கிறார் குலசேகர ஆழ்வார்.
கருத்துகள்
கருத்துரையிடுக