திருஞான சம்பந்தர் – மண்ணின் நல்லவண்ணம்- பொருள்
திருஞான சம்பந்தர் – மண்ணின் நல்லவண்ணம்- பொருள்
மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே
பொருள் : உயிர்கள் இந்த மண் உலகத்தில் நலமோடு வாழலாம். தினமும்
இறைவனை வழிபட்டு எவ்வித குறைவும் இன்றி வீடுபேற்றை
அடையலாம். இதை எல்லாம் மக்களுக்கு அருளும் பொருட்டே கண்ணுக்கு
இனிய , நல்ல வளங்களைக் கொண்டுள்ள கழுமலம் என்னும் ஊரில்
பெண்களில் சிறந்தவள் ஆன பார்வதியோடு இறைவன் காட்சி
தருகிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக