வல்லினம் மிகும் இடங்கள்

 

                                        வல்லினம் மிகும் இடங்கள்
 

1. , இ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வரும் வல்லினங்களாகிய க, , , ப மிகும்.
 

அ + பையன்

-

அப்பையன்

இ + பெண்

-

இப் பெண்

எ + திசை

-

எத்திசை

2. அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி? என்ற சுட்டு, வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.
 

அந்த + பெட்டி

-

அந்தப்பெட்டி

இந்த + பழம்

-

இந்தப் பழம்

எந்த + கோயில்

-

எந்தக் கோயில்

அங்கு + கண்டேன்

-

அங்குக் கண்டேன்

எங்கு + போனார்

-

எங்குப் போனார்

அப்படி + கேள்

-

அப்படிக் கேள்

எப்படி + போனார்

-

எப்படிப் போனார்?

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
 

நூலை + படி

-

நூலைப் படி

பூவை + சூடு

-

பூவைச் சூடு

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.
 

தோழனுக்கு + கொடு

-

தோழனுக்குக் கொடு

ஊருக்கு + செல்

-

ஊருக்குச் செல்

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
 

தண்ணீர் + பானை

-

தண்ணீர்ப் பானை

மரம் + பெட்டி

-

மரப் பெட்டி

சட்டை + துணி

-

சட்டைத் துணி

விழி + புனல்

-

விழிப்புனல்.

6. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
 

பச்சை + கிளி

-

பச்சைக் கிளி

வெள்ளை + குதிரை

-

வெள்ளைக் குதிரை

7. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
 

தாமரை + பூ

-

தாமரைப் பூ

சாரை + பாம்பு

-

சாரைப் பாம்பு

8. உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.
 

மலர் + கண்

-

மலர்க் கண்

தாமரை + கை

-

தாமரைக் கை

9. ஓர் எழுத்துச் சொற்கள் சிலவற்றில் வல்லினம் மிகும்.
 

தை + பாவை

-

தைப் பாவை

பூ + தொட்டி

-

பூத் தொட்டி

தீ + சுடர்

-

தீச் சுடர்

10. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
 

வளையா + செங்கோல்

-

வளையாச் செங்கோல்

அழியா + புகழ்

-

அழியாப் புகழ்.

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
 

பத்து + பாட்டு

-

பத்துப் பாட்டு

எட்டு + தொகை

-

எட்டுத் தொகை.

12. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.
 

திரு + குறள்

-

திருக்குறள்

பொது + சொத்து

-

பொதுச் சொத்து.

13. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 

மழை + காலம்

-

மழைக் காலம்

பனி + துளி

-

பனித் துளி

14. சால, தவ முதலான உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.
 

சால +பேசினான்

-

சாலப் பேசினான்.

தவ + பெரிது

-

தவப் பெரிது

15. , ற ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.
 

ஆடு + பட்டி

-

ஆட்டுப் பட்டி

நாடு + பற்று

-

நாட்டுப் பற்று


 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்