சிறப்புத்தமிழ்- ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே-பொன்முடியார்
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
திணை : வாகை
துறை :
மூதில்முல்லை.
பாடியவர் : பொன்முடியார்
ஈன்று
புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
பொருள் விளக்கம் :
Ø மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் தாயின் தலையாய கடமை.
அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை.
Ø அவனுக்குத் தேவையான வேல் போன்ற படைக் கருவிகளை உருவாக்கிக்
கொடுத்தல் கொல்லரின் கடமை.
Ø அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது
அரசனின் கடமை.
Ø ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச்
செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது
அம்மகனின் கடமை என்கிறார் பொன்முடியார் .
கருத்துகள்
கருத்துரையிடுக