பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு
பத்துப்பாட்டு இலக்கிய வரலாறு
Ω பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும்
நூல்களின் தொகுப்புகளுள்
ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும்.
Ω இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு,
பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என
வழங்கப்படுகிறது.
Ω இவை அனைத்தும் ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று
தொடர்பற்றவை. வெவ்வேறு
ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. இந்த
அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
முருகு பொருநாறு பாணிரண்டு
முல்லை
பெருகு வள மதுரைக்
காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை
கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என வரும் பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும்.
இவற்றுள் மிகச் சிறியது 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டாகும் , மிகப்
பெரியது 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சியாகும் .
திருமுருகாற்றுப்படை
· நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது
திருமுருகாற்றுப்படை.
· மதுரையைச் சேர்ந்த நக்கீரன் புலவரால் இது
இயற்றப்பட்டது..
· முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட
இந்நூல் 317 அடிகளைக் கொண்ட
ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.
· "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல்
வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை"
வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன்
வழிப்படுத்துவது எனப்
பொருள்படும்..
· இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை
என்பதாகும்.இதன் சிறப்புக் கருதி இந்நூலினை
சைவத் திருமுறைகளுள் 11ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.
· பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல்
காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல்
நூலாக வைத்து எண்ணப்படுகிறது.
· திருமுருகாற்றுப்படை நூல் மட்டும்
ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான்
பெயரில் அமைந்துள்ளது.
பொருநராற்றுப்படை
· இந்நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டு இயற்றப்பட்டது.
· முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர்.
· இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த
ஆசிரியப்பாவாலானது.
· இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும்
புறத்திணை நூலாகும்.
சிறுபாணாற்றுப்படை
· நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது
சிறுபாணாற்றுப்படைஎனும் இந்நூல்.
· இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான
நல்லியக்கோடன் என்பவனைத்
தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.
· அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான்
வழியிற் கண்ட இன்னொரு
பாணனை அவனிடம்
வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெரும்பாணாற்றுப்படை
· 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை.
· பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும்
இன்னொரு பாணனைத்
தொண்டைமான் இளந்திரையன்
என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல்.
· கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவரால் அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல்.
முல்லைப் பாட்டு
· பத்துப்பாட்டுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும்
சிறியது இதுவே.
· 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது.
· பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப்
பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப்
பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.
· நப்பூதனார் என்னும் புலவரால் பாடப்பட்டது முல்லைப்பாட்டு. இதுநெஞ்சாற்றுப்படை
எனவும் அழைக்கப்படுகிறது.
மதுரைக் காஞ்சி.
· இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது
இது.
· மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை
இயற்றியுள்ளார்.
· இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன்
நெடுஞ்செழியனுக்கு உலகியல்
உணர்த்துவதாய் இப்பாடல்
பாடப்பட்டுள்ளது..
· பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும்
போரில் பகைவரைக்
கொன்றழித்ததையும்
கொன்றழித்த நாட்டுக் கோட்டையை அழித்து அங்கே எள் மற்றும்
திவசங்கள் விதைத்ததையும்
பாடுவர்.
· மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு
பாழ்படுவதையும் பாடுகிறார்.
நெடுநல்வாடை
· தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியனை பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு
மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே
நெடுநல்வாடை என்னும் நூல்.,
· தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட
நெடு வாடையாகவும், போர்
வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல
வாடையாகவும் அமைந்தது குறித்தே
இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில்
நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக்
கூறுவர்.
· நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய
வேம்பு நக்கீரரால்
சுட்டப்பட்டுள்ளது.
· ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க்
கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்
பொருள் நூலாயிற்று.
குறிஞ்சிப் பாட்டு.
· கபிலர் என்னும் புலவர் பாடிய இந்நூல் 261 அடிகளாலானது .
· ஆரிய அரசன் பிரகத்தன் என்பாருக்குத் தமிழின்
பெருமை உணர்த்த வேண்டி
ஆசிரியப்பாவினால்
இந்நூல் பாடப்பெற்றது.
· இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும்
உண்டு.அவ் அரசன் தமிழர்தம் காதல்
ஒழுக்கத்தை
அறிந்துகொள்ள,குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல்
நிமித்தமும்
குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது.
பட்டினப்பாலை
· பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய
கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும்
புலவரே இதனையும்
இயற்றியுள்ளார்.
· பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின்
சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை
ஆகியவற்றை எடுத்து
இயம்பும் இந்நூல் 301 அடிகளால் அமைந்துள்ளது.
· இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின்
பெருமைகளை எடுத்துக்கூறுகிறார்
புலவர்..
· கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின்
பெருஞ்சிறப்பைச் சொல்வதே
பட்டினப்பாலை.
மலைபடுகடாம்
· பத்துப்பாட்டு நூல்களுள் இரண்டாவது பெரிய நூல்
இது.
· 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப்
பெருங்கௌசிகனார் என்னும்
புலவர் ஆவார்.
· இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும்
குறிப்பிடுவர்.
· நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு
பாடப்பட்டது இந்நூல்.
புறப்பொருள் பற்றிய நூல்கள்:
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பொரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
மதுரைக்காஞ்சி
அகப்பொருள் பற்றிய நூல்கள்:
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:
நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
கருத்துகள்
கருத்துரையிடுக