குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை
- 88. குறிஞ்சி - தோழி கூற்று
பாடியவர்
: மதுரைக் கதக்கண்ணனார்.
திணை : குறிஞ்சித் திணை
கூற்று : தோழி கூற்று (“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்:
இனி இரவிலே வருவான்” என்று தோழி
தலைவிக்குக் கூறியது.)
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.
பொருள் : தோழி! ஒலிக்கும் வெள்ளிய
அருவியையுடைய உயர்ந்த
மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய
கண்ணையுடைய பெரிய
களிறு வலிமையையுடைய புலியை எதிர்த்துப் போர் செய்து தனது
பழைய வலிமை சோர்தற்கிடமாகிய மக்கள் செல்ல இயலாத மலைச்
சாரலின் வழியேநாடு இரவில் வருதலையும் செய்வான்; அங்ஙனம் அவன்
வருதலினால்நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக