நற்றிணை 02 அழுந்துபட வீழ்ந்த பெருந்
|
நற்றிணை 02 அழுந்துபட வீழ்ந்த பெருந் பாடியவர் : பெரும்பதுமனார் திணை :
பாலை கூற்று
:உடன்
போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது
. |
|
அழுந்துபட
வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
|
||
|
ஒலி
வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
|
||
|
ஆறு
செல் மாக்கள் சென்னி எறிந்த |
|
||
|
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
|
||
|
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,5 |
|
||
|
மான்
நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
|
||
|
வை
எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
|
||
|
எல்லிடை
நீங்கும் இளையோன் உள்ளம், |
|
||
|
காலொடு
பட்ட மாரி |
|
||
|
மால்
வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே10 |
|||
பொருள்பொருள்
பொருள் : மிக ஆழமாக அழுந்திக் கிடக்கின்ற குளிர்ச்சியையுடைய
குன்றம்
. அந்தக் குன்றத்தில் ஈச்ச மரங்கள் தழைத்து இருக்கின்றன .
ஈச்சங்காட்டில்
காற்றுச் சுழன்று வீசுகின்றது . அக்காட்டு வழியே செல்லும்
மக்களுடைய
தலையை புலிக் குட்டிகள் மோதுகின்றன. அதனால் அப்புலி
க்குட்டிகளின்
தலைகளில் சிவப்புக் கரை பட்டது . வாயெல்லாம் குருதிக்
கரை படிந்தது
.மாலை நேரத்தில்
புலிக்குட்டிகள் தம் பதுங்கி
இருக்கும்
மரல் தூறிலிருந்து
நிமிர்ந்து பார்க்கும். அக்காட்டில் இண்டங்கொடிகளும்
ஈங்கை மரங்களும் இருக்கும் . இப்படிபட்ட காட்டில் இரவுப்
பொழுதில்
கூர்மையான
பற்களை உடைய மென்மைத் தன்மை வாய்ந்த பெண்ணை
முன்னே
விட்டு பின்னே தொடர்கின்ற இந்த இளையவன் உள்ளம்
காற்றோடு
கலந்து பொழியும் மழையில் பெரிய கற்களைப் புரட்டுமாறு
இடிக்கின்ற
இடியைக் காட்டிலும் கொடியது .
கூற்று விளக்கம் : தலைவனும் தலைவியும்
ஒருப்பட்டெழுந்து சுரத்து
இடைச் செல்லக்கண்டவர் , இக்கொடும்
சுரத்தில் மென்மைப் பண்புடைய
இவளைக் கொண்டு செல்லும் இந்த இளையவன் உள்ளம் இடியைக்
காட்டிலும் கொடிது என்று கவலைப்பட்டுக் கூறியது .
கருத்துகள்
கருத்துரையிடுக