நற்றிணை 01 நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
|
நற்றிணை 01
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்; பாடியவர் : கபிலர் திணை : குறிஞ்சி கூற்று : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி
சொல்லியது . நின்ற சொல்லர்; நீடுதோறு
இனியர்; என்றும் என் தோள் பிரிபு அறியலரே' தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, புரைய மன்ற, புரையோர்
கேண்மை; |
5 |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்தருளி, நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
|
|
தோழீ ! நம்
காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத்
தோன்றுகின்ற
இனிமையுடையவர்; எப்பொழுதும்
என் தோள்களைப் பிரிதல்
என்பதை
அறியாதவர் . அத்தகைய சிறந்தவருடைய நட்பு, தாமரையின்
குளிர்ந்த
மகரந்ததினை ஊதி , உயர்ந்த சந்தனத்தின் தாதினையும் ஊதி,
அந்தச்
சந்தன மரத்திதின் உச்சியில் சென்று வைத்த
இனிய தேன் போல
உறுதியாக
உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் அமையாது. அது
போல அவர்
இல்லாமல் நாம் இல்லை . நம் மீது மிகுந்த விருப்பம்
கொண்டவர்
அவர் . அவர் பிரிந்தால் நம் நெற்றியில் பசலை படரும் .
அவ்வாறு
பசலை படர்வதற்கு அஞ்சி தடுமாற்றம்
அடைவாரோ ?
அடையமாட்டார்
. (இனியும் அவர் பிரியா கருத மாட்டார் என்பது முடிபு )
கூற்று விளக்கம் : தலைவன் பிரியக் கருதியது அறிந்த தோழி தலைவி
இடத்துக் கூறுதலும் , தலைவி அவர் இல்லாமல் அமையாத என்னை
வருந்தும் படி விட்டுபிரிக்கின்ற அன்னதொரு குணக்குறைபாடு
இல்லாதவர் எனத் தலைவனை புகழ்ந்து கூறுவது .
கருத்துகள்
கருத்துரையிடுக