குறுந்தொகை - 32 காலையும் பகலும் கையறு மாலையும் அள்ளூர் நன்முல்லையார்.
குறுந்தொகை - 32. காலையும் பகலும் கையறு மாலையும்
பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார்.
திணை :குறிஞ்சி
கூற்று :தலைவன் கூற்று
(தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடம்படாமையை அறிந்த
தலைவன், யான் தலைவியின் பிரிவை ஆற்றேன்;
அவளை அடையும்
பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்;
வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேராத
வண்ணம் நீ குறைநேர்வாயாக
என்று அவளுக்குக் கூறியது).
|
காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே
காமம் மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே |
|
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. |
|
|
காலைப்பொழுதும் உச்சிப் பொழுதும் பிரிந்தோர் வருந்துவதற்குக்
காரணமாகிய மாலைப் பொழுதும் ஊரினர் உறங்குகின்ற இடையிரவும்
விடியற்காலமும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோன்றி
அழிந்துவிடின் அத்தகையோருடைய
காமம் உண்மை அன்று; பிரிவு
வருமாயின் அப்போது குதிரையெனக் கொண்டு பனை மடலால் செய்த
உருவத்தை ஊர்ந்து தெருவில் வெளிப்பட்டு யாவரும் இவளால்
இவன்
இச்செயல் செய்தானென்று தெரியும்படி தலைவி எனக்குச் செய்த
துயரைப்
பலர் அறியச் செய்தலும் பழி உண்டாகும்; அது செய்யாது
உயிரோடு
கருத்துகள்
கருத்துரையிடுக